நாம் அருந்தும் பானங்களிலேயே இளநீர்தான் சுத்தமானதும், சத்து நிறைந்த தாகும். இளநீரில் சர்க்கரை, கொழுப்பு, பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம், கால்சியம், சல்பர், பாஸ்பரஸ், குளோரின் மற்றும் வைட்டமின் சியும் பி காம்ப்ளெக்ஸும் உள்ளன.
*கோடையில் தினமும் இரண்டு இளநீர் குடித்து வந்தால் சிறுநீர் கடுப்பு நீங்கும். உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தும்.
*வழுக்கை இல்லாத இளநீரை பகல் உணவுக்குப் பிறகு குடித்தால் உணவு எளிதில் ஜீரணமாகி, நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
*இளநீர் கொண்டு அம்மை தழும்புகளை கழுவினால் வடு மறையும்.
*தினமும் வெந்நீரில் சிறிது இளநீர் கலந்து முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவு பெறும்.
*இளநீரில் உள்ள பொட்டாசியம் இதயத்திற்கு பலன் தரும்.
*பேதி, மயக்கம், அசதி ஏற்படும் போது இரண்டு டம்ளர் இளநீர் சாப்பிடலாம்.
*உடம்பெல்லாம் அனல் போல் தகித்தால் இளநீர் ஒரு நாளைக்கு மூன்று முறை பருகினால் தேக சூடு குறையும்.
*உடல் சூட்டை கட்டுப்படுத்தி மலச்சிக்கல், வயிற்றுப் புண், வாய்ப்புண் போன்ற பாதிப்புகளை சரி செய்யும்.
*கோடை காலத்தில் உடலுக்குத் தேவையான நீர்சத்து வெளியேறும். அதை மீண்டும் உடலுக்கு அளிக்க இளநீர்தான் சரியான தீர்வு.
*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்.
*சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.